சூசை இல்லத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் விமரிசையாக நடைபெற்றது!

காஜாங், டிச 26-
உலகமெங்கும் உள்ள கிறிஸ்தவர்களின் நேற்று முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்தே கொண்டாட்டங்கள் களை கட்ட தொடங்கின. கருணையே வடிவான இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் காஜாங் தாமான் கோப்பராசி கியூபெக்ஸ் வட்டாரத்தில் முக்கிய பிரமுகர் சூசை இல்லத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

தனது இல்லத்திற்கு வந்த உறவினர்கள், நண்பர்களை அன்போடு வரவேற்று அறுசுவை உணவை வழங்கி உபசரித்து மகிழ்ந்தார்.

ஒவ்வொரு ஆண்டும் சூசை அவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு உபரிப்பை நடத்துவார்.
நேற்று நடைபெற்ற உபரிப்பில் ஏராளமானோர் கலந்து கொண்டது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles