முஹம்மத் சுக்ரி பெர்லிஸ் மந்திரி புசார் பதவியை ராஜினாமா செய்தார்

பெர்லிஸ் மந்திரி புசார் பதவியை முஹம்மத் சுக்ரி ரம்லி ராஜினாமா செய்துள்ளார்.

சங்லாங் சட்டமன்ற உறுப்பினர் முகமட் சுக்ரி ரம்லி, உடல்நலக் காரணங்களுக்காக அப்பதவியில் இருந்து இன்று முதல் தானாக முன்வந்து ராஜினாமா செய்ததாக அறிவித்தார்.

முன்னதாக அவர் இன்று பிற்பகல் பெர்லிஸ் ராஜா, துவாங்கு சையத் சிராஜுதீன் ஜமாலுல்லைலிடம் மந்திரி புசார் பதவி விலகல் கடிதத்தை வழங்கினார்.

துவாங்கு ஃபௌசியா மருத்துவமனையின் ராயல் வார்டில் உள்ள துவாங்கு சையத் சிராஜுதீன் முன் ஆஜராக அனுமதிக்கப்பட்டதாக அறிவித்து, ராஜினாமா செய்யும் தனது விருப்பத்தை அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles