போதைப்பொருள் மயக்கத்தில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை தேவை

ஷா ஆலாம், ஏப்ரல் 6: சமீபத்தில் இ-ஹெய்லிங் ஓட்டுநர் அமிருல் ஹஃபீஸ் ஓமர் என்பவரின் மரணத்திற்கு காரணமான விபத்தைத் தொடர்ந்து, மது அல்லது போதைப்பொருள் செல்வாக்கின் கீழ் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக சமரசமின்றி மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மனிதவள மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீராமான் இந்த சம்பவத்தை எளிதாகக் கருத முடியாது என்றும், அதிகாரிகளிடமிருந்து உடனடி நடவடிக்கை தேவை என்றும் கூறினார்.

சாலைப் பயனீட்டாளர்களின் பாதுகாப்பு எப்போதும் உறுதி செய்யப்படுவதற்கு, மதுபோதையில் அல்லது தடைசெய்யப்பட்ட பொருட்களின் செல்வாக்கின் கீழ் வாகனம் ஓட்டும் ஓட்டுநர்களின் பிரச்சினை தீவிரமாகக் கையாளப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

“இந்த விஷயத்தில், குறிப்பாக மதுபோதையில் அல்லது தடைசெய்யப்பட்ட பொருட்களின் செல்வாக்கின் கீழ் வாகனம் ஓட்டுபவர்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இனி சமரசம் இருக்கக்கூடாது,” என்றார்.

இன்று ரிம்பா 2-இல் அமிருலின் விதவையான நோர் நதியா அப்துல் மஜித்தின் குடும்பத்தினரைச் சந்தித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.

அதே நேரத்தில், தற்போது கடுமையான சோதனையை எதிர்கொள்ளும் பாதிக்கப் பட்டவரின் குடும்பத்திற்கு உதவிய பல்வேறு தரப்பினரின் விரைவான நடவடிக்கையையும் அவர் பாராட்டினார்.

செய்யப்பட்ட குற்றத்திற்குத் தகுந்தவாறு சட்டங்கள் மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) உள்ளிட்ட அமலாக்கத்தின் நிலையை மறுஆய்வு செய்யுமாறும் பாப்பா ராய்டு வலியுறுத்தினார்.

சமீபத்தில் நடந்த பல விபத்துக்கள் மரணத்தில் முடிந்துள்ளன, எனவே இந்த நிலைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும், மேலும் தடுப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட வேண்டும்,” என்றார்.

இதற்கிடையில், கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதிராவ் , சட்ட அமலாக்கம் பாரபட்சமின்றி நேர்மையாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

“பின்னணியைப் பொருட்படுத்தாமல் தவறு தவறே, சட்டம் கடுமையாக அமல்படுத்தப்பட வேண்டும்.”

“அனைத்து வழக்குகளுக்கும் சமமான கவனம் அளிக்கப்பட வேண்டும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்,” என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles