

ஷா ஆலம், ஏப் 12-
அண்மையில் வெளியான எஸ் பி. எம். தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெற்ற Pusat Tusyen Arena Matriks மாணவர்களுக்கு
அரினா மெட்ரிக்ஸ் கல்வி நிறுவனத்தின் சார்பில் சிறப்பு செய்யப்பட்டது.
இந்த சிறப்பு நிகழ்வு, எங்கள் மாணவர்களின் சாதனைகள் மற்றும் வெற்றிகளை கொண்டாடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த அர்த்தமுள்ள நிகழ்வில், SPM 2025 மாணவர்களின் கல்விசார் சிறப்புகள் முன்னிறுத்தப்பட்டு, அவர்களின் கடின உழைப்பை பாராட்டுவதுடன், மேலும் பலரையும் வெற்றியை நோக்கி முன்னேற ஊக்குவிக்கும் என்று செகு ஜனஹான் தெரிவித்தார்.
மேலும், எங்கள் நிறுவனத்திற்கு பெருமை சேர்க்கும் ஒரு முக்கிய தருணத்தையும் பகிர்ந்து கொள்ள மகிழ்ச்சி அடைகிறோம்.
இந்நிகழ்வின் போது செகு ஜனஹான் அறுமுகம் அவர்கள் “கணித அமர்வில் தொடர்ச்சியாக அதிகமான பங்கேற்பாளர்கள்” என்ற ASEAN சாதனைக்காக அதிகாரப்பூர்வமாக கௌரவிக்கப்பட்டார்.
இது கல்வித் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும் என்று அவர் சொன்னார்.

