

இன்று மொத்தம் 16 பேர் மேலவை உறுப்பினர்களாக பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
இதில் ஜசெக சார்பில் டாக்டர் லிங்கேஸ்வரன் மற்றும் மஇகா சார்பில் டத்தோ சிவராஜ் ஆகியோர் பதவி ஏற்றுக் கொண்டனர்.
பினாங்கு மாநில தொழில் வர்த்தக பிரமுகர் டத்தோஸ்ரீ அருணாசலத்தின் புதல்வர் டாக்டர் லிங்கேஸ்வரன் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே இசையா ஜோக்கோப், டத்தோ டாக்டர் ஹட்டா ரம்லி ஆகியோரும் மேலவை உறுப்பினராக பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

