

கோலாலம்பூர் ஏப்ரல் 28 –
நாடு முழுவதும் உள்ள UTC முகப்பிடங்களில்
MY Future Jobs சேட்டிலைட் (Satelit) மையங்களை மேம்படுத்துவதில் மனித வள அமைச்சு தீவிர
கவனம் செலுத்தி வருகிறது என்று மனித வள அமைச்சர்
வ. சிவகுமார் தெரிவித்தார்.
இது முதலாளிகள் மற்றும் வேலை தேடுபவர்கள் விரைவாகவும் எளிதாகவும் வேலைகளை அணுகுவதற்கு உதவும் என்றார் அவர்.
இவ்வாண்டு தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தொழிலாளர்களுக்காக அரசு என்ன திட்டங்கள் செயல் படுத்தப்போகிறது என்று RTM Nasionl fm வானொலி கேள்வியை முன் வைத்தபோது அவர் இவ்வாறு பதிலளித்தார்.
இன்றைய வாழ்க்கைச் சவால்களை எதிர்கொள்வதில் சமூகத்தின் புகார்கள் குறித்து அரசாங்கம் எப்போதும் அக்கறை கொண்டுள்ளது.
அதன்படி, 2023 பட்ஜெட்டில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது.
SOCSO மூலம், சமூக பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் செயலில் உள்ள தொழிலாளர் சந்தையை உள்ளடக்கிய 10 முன்முயற்சிகளை செயல்படுத்த 313 மில்லியனுக்கும் அதிகமான ரிங்கிட் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தாக்கல் செய்த 2023 பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.
Madani மலேசியா தொழில் அதிகாரமளிக்கும் திட்டத்தின் கீழ் TVET தொழில் அதிகாரமளிக்கும் திட்டம் மற்றும் தொழில் வளர்ச்சித் திட்டம் ஆகியவை இதில் அடங்கும் என்று அவர் சொன்னார்.

