

மலேசிய இந்திய விளையாட்டு பேரவை ஏற்பாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பரதன் கின்னக் கால்பந்து போட்டியில் நடப்புச் சாம்பியன் கோலாலம்பூர் குழு நாளை பகாங் குழுவை சந்திக்கிறது.
நாளை 4 மணிக்கு செர்டாங் யூபிஎம் அரங்கில் பகாங் குழுவை சந்திக்கும் கோலாலம்பூர் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று குழு நிர்வாகி பத்துமலை தெரிவித்தார்.
கடந்த வாரத்தில் தொடக்க ஆட்டத்தில் கோலாலம்பூர் குழு 3-1 என்ற கொள்கைக்கு புத்ரா ஜெயா குழுவை வீழ்த்தியது..
நாளை ஆட்டத்தில் வெற்றி பெற்றால் கோலாலம்பூர் குழு அரை இறுதி சுற்று வாய்ப்பை வலுப்படுத்திக் கொள்ளும் என்று அவர் சொன்னார்.

