கொள்ளையர்களிடம்
இருந்து நாட்டை
காப்பாற்றும்
தருணம் வந்துவிட்டது!
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முழக்கம்

தங்கள் குடும்பத்தினரையும் தங்களுக்கு வேண்டியவர்களையும் பணக்காரர்களாக்கிக் கொண்டிருக்கும் கொள்ளையர்கள் மற்றும் அடக்குமுறையாளர் களிடமிருந்து பக்கத்தான் ஹராப்பான் நாட்டைக் காக்கும் தருணம் வந்து விட்டது என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முழங்கினர்.
பதினைந்தாவது பொதுத் தேர்தலை எதிர்கொள்ள பக்கத்தான் ஹரப்பான் தயாராக உள்ளதோடு கடந்த 2018 ஆம் ஆண்டில் மக்கள் கொடுத்த ஆதரவை மீண்டும் பெறுவதற்கு தயாராகி வருவதாக எதிர்க்கட்சித் தலைவருமான அவர் குறிப்பிட்டார்.
வளமான எதிர்காலம் மற்றும் சுபிட்சத்தையும் மக்கள் நலன் மீது உண்மையான அக்கறையும் கொண்ட ஒரு அரசாங்கத்தை உருவாக்க நாங்கள் தயாராகி விட்டோம்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடத்தப்பட்டாலும் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியின் வசமிருக்கும் சிலாங்கூர், பினாங்கு மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மாநில சட்டமன்றங்கள் கலைக்கப்படாது .
ஊழல்வாதிகள் மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுக்க மலேசியர்கள் துணிந்து வாக்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles