


கோலத்திரெங்கானு, ஜூன் 19-
தொழில் மற்றும் வேலை சந்தைக்கு ஏற்ப
நாட்டில் திறமையான தொழிலாளர்களை உருவாக்க இளைஞர்களுக்கு குறுகிய கால உயர் தொழில்நுட்ப படிப்புகள் வழங்கப்படும் என்று மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் இன்று அறிவித்தார்.
மனிதவளத் துறை (Jabatan Tenaga Manusia) மூலம் இளைஞர்களுக்கு
மேலும் பல திட்டங்களை உருவாக்கும் பணியில் மனிதவள அமைச்சு ஈடுபட்டுள்ளது.
TVET தொழில் திறன் கல்வி மூலம்
இளைஞர்களை மறைமுகமாக ஈர்க்க
TVET திட்டங்கள் கைகொடுக்கும்.
ஒரே நேரத்தில் அதிகமான தொழில் திறன் பட்டதாரிகளையும் உருவாக்க முடியும்.
TVET திட்டத்தை மேம்படுத்துவது மனிதவள அமைச்சின் முன்னுரிமையாகும்.
இளைஞர்கள் மத்தியில் இதை ஊக்குவிக்க பல புதுமைகள் மற்றும் மேம்பாடுகள்
தேவைப்படுகிறது என்றார்.
தொழில் மற்றும் வேலை சந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப இந்த தொழில் திறன் திட்டங்கள் இருக்க வேண்டும்.
அடுத்த 5 ஆண்டுகளில், 89 மில்லியன் வேலைகள்
மறைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம் 69 மில்லியன் வேலைகள் உருவாக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
இயந்திரம் மற்றும் தொழில்நுட்ப ஆபரேட்டர்கள் (operator) மற்றும்
தொழில்நுட்ப ஆய்வாளர்கள் வளர்ச்சியடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில்
40% விழுக்காடு தொழில் பயிற்றுனர்கள் அல்லது பணியாளர்கள்
பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
தொழில்துறை பயிற்சி கழகம் (Institut Latihan Perindustrian) மற்றும்
நாடு முழுவதும் உயர் தொழில்நுட்ப பயிற்சி (Pusat Latihan Teknologi Tinggi) மூலம் மனிதவள
அமைச்சு பயிற்சி நிறுவனத்தை உருவாக்க விரும்புகிறது
கல்விக்கான முக்கிய இடமாக தொழில்துறை (Institut Latihan Perindustrian).
டிப்ளமோ கல்வி வழங்கப்படும்.
டிப்ளமோ திறன் சான்றிதழ்களை வைத்திருப்பவர்கள் உயர் தொழில்நுட்ப
பயிற்சி மையத்திற்குள் செல்ல எளிதான பாதை வழங்கப்படும்
இவை அனைத்தும் சிறப்பாக செயல்படுத்த மனிதவள அமைச்சுக்கு ஆதரவும் வரவேற்பும் தேவைபடுகிறது.
நாட்டில் உள்ள தொழில்துறைகள் தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்று எதிர்பார்ப்பதாக இன்று கோலத் திரெங்கானுவில் உள்ளுர் தொழில் துறை நிறுவனங்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் பேசியபோது மனிதவள அமைச்சர் சிவகுமார் இவ்வாறு தெரிவித்தார் .

