சிறுநீரக நோயாளிகளின் டயாலிசிஸ் சிகிச்சைக்கு Socso RM330 மில்லியன் செலவிட்டுள்ளது! மனிதவள அமைச்சர் சிவகுமார் அறிவிப்பு

கிள்ளான் ஜூலை 7-
Socso சமூக நல பாதுகாப்பு நிறுவனம் 2022 இல் அதன் பங்களிப்பாளர்களுக்கு டயாலிசிஸ் சிகிச்சைக்காக RM334.67 மில்லியன் செலவிட்டிருப்பதாக மனிதவள அமைச்சர் வ. சிவக்குமார் கூறுகிறார்.

டயாலிசிஸ் சிகிச்சைக்காக தனது சந்தாதாரர்களிடம் இருந்து Socso ஆண்டுதோறும் 2,000 முதல் 3,000 புதிய விண்ணப்பங்களைப் பெறுகிறது.

1999 ஆம் ஆண்டில் டயாலிசிஸ் சிகிச்சைக்கான செலவு RM1.12 மில்லியனாக இருந்தது.

இப்போது சிகிச்சை தேவைப்படும் பங்களிப்பாளர்களின் எண்ணிக்கையும் கடந்த இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

10 ஆண்டுகளில் Socso நிறுவனம் மேற்கொள்ளும் டயாலிசிஸ் சிகிச்சைக்கான செலவு அரை பில்லியன் ரிங்கிட் ஆகும்.

1999 ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு ஜூன் 2023 வரை 707 சொக்சோ டயாலிசிஸ் மையங்கள் மூலம்
17 ஆயிரத்து 486 பேருக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளது என்று நேற்று கிள்ளான் புதிய சொக்சோ அலுவலகம் மற்றும் டயாலிசிஸ் சிகிச்சை மையத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த புதிய டயாலிசிஸ் மையத்தில் ஒரு நாளைக்கு 18 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும்.

இப்போது
சர்க்கரை நோய் உள்ளிட்ட தொற்றாத நோய்கள் (என்சிடி) தீவிர உலகளாவிய சுகாதாரப் பிரச்சினையாக இருப்பதால், Socso டயாலிசிஸ் மையம் சரியான நேரத்தில் நிறுவப்பட்டுள்ளது என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles