
வரவிருக்கும் பொதுத் தேர்தலைப் புறக்கணிக்க அழைப்பு விடுக்கும் சமூக ஊடக செய்திகளை புறக்கணிக்குமாறு வாக்காளர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
ஏனெனில் இது குறைந்த வாக்குப்பதிவை நம்புபவர்களுக்கு சாதகமாக அமையும் என்று கெஅடிலான் தகவல் தலைவர் பாஹ்மி பாட்சில் தெரிவித்துள்ளார்.
மார்ச் மாதம் ஜொகூரில் குறைந்த வாக்குப்பதிவு பாரிசான் நேஷனல் மகத்தான வெற்றிக்கு வழிவகுத்தது.
இதனை முறியடிக்க வாக்காளர்கள் திரண்டு வந்து வாக்களிக்க வேண்டும்.
“வாக்குகள் விலைமதிப்பற்றவை மற்றும் முக்கியமானவை. அது மலேசியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது என்று அவர் கூறினார்.

