
தேசிய முன்னணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜி.எஸ்.டி.யை அமல்படுத்துவார்கள்.
இது மக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தும் என்பதால் பொதுமக்கள் தேசிய முன்னணி மற்றும் அம்னோவை புறக்கணிக்க வேண்டும் என்று பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி சிவகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
நஜிப் பிரதமராக இருந்த போது தேசிய முன்னணி ஆட்சியில் ஐஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டது.
பக்கத்தான் ஹரப்பான் ஆட்சியில் இது அகற்றப்பட்டது.
இப்போது மீண்டும் ஐஎஸ்டியை கொண்டு வர தேசிய முன்னணி துடிக்கிறது
ஆகவே பொதுமக்கள் இந்த தேர்தலில் தேசிய முன்னணியை புறக்கணிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஐஎஸ்டியால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவார்கள்குறிப்பாக ஏழைகளுக்கு இது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் எச்சரித்தார்.

