
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தோனேசியாவில் நடைபெறும் பெண்கள் கால்பந்து போட்டியில் மலேசியா இந்தியர் பெண்கள் குழு பங்கேற்கிறது என்று பினாங்கு மாநில இந்தியர் விளையாட்டு பேரவை தலைவர் ஸ்ரீ சங்கர் தெரிவித்தார்.
Indonesia Surabaya அரங்கில் நடக்கும் இந்த போட்டியில் அதிரடி படைக்க மலேசியா இந்தியர் பெண்கள் குழு காத்துக் கொண்டிருக்கிறது.
மேலும் அடுத்தாண்டு மார்ச் மாதம் சிங்கப்பூரில் நடக்கும் போட்டியிலும் மலேசியா இந்தியர் பெண்கள் குழு பங்கேற்கிறது.
இதனிடையே அடுத்த ஆண்டு நெகிரி செம்பிலான் மாநிலத்தில் மலேசியா பெண்கள் இடையிலான பூவை கிண்ணக் கால்பந்து போட்டியில் மொத்தம் எட்டு மாநில குழுக்கள் கலந்து கொள்கிறது என்று அவர் சொன்னார்.

