தொழிலாளர்களுக்கு சிறந்த பணிச்சூழலை உருவாக்குவதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க முடியும்! ஆர்டிஎம் நேர்காணலில் அமைச்சர் சிவகுமார் அறிவிப்பு

கோலாலம்பூர், ஆக. 16-
தொழிலாளர்களுக்கு சிறந்த பணிச்சூழலை உருவாக்குவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை அதிகரிக்க முடியும் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்.

நேற்று ஆர்டிஎம் – 1இல் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட நேர்காணலின் போது மனிதவள அமைச்சர் சிவகுமாரிடம் பல முக்கிய கேள்விகள் முன் வைக்கப்பட்டன.

வெற்றிகரமான சிவில் பொருளாதாரத்திற்கு மனிதவள அமைச்சின் முக்கிய பங்கு என்ன? என்பது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.

திறமையான மற்றும் உற்பத்தி திறன் கொண்ட பணியாளர்களை உருவாக்குவதன் மூலம்
சிவில் பொருளாதாரத்தை வெற்றிகரமாக மாற்றுவதில் மனிதவள அமைச்சு முக்கிய பங்கு வகிக்கிறது என்றார் அவர்.

ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கவும், மேம்படுத்தவும், முதலாளிகளை ஊக்குவிக்கவும்
பயிற்சி, சட்ட அமலாக்கம் மற்றும் முதலீடு
தொழில்துறை உறவுகளை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு நியாயமான பணியிடம் உருவாக்கப்படுகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

தொழிலாளர்
திறன் மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்த மனித வள அமைச்சின் திட்டம் என்ன? என்பது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.

மனிதவள அமைச்சு எப்போதும் சிறந்த பணிச்சூழலை உருவாக்க பாடுபடுகிறது.

மிகவும் சாதகமான பணிச்சூழலை உருவாக்குவதன் மூலம்,
பணியாளர்களின் திறன் மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது.

இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது.

திறன் வாய்ந்த தொழிலாளர்களை உருவாக்க மனிதவள அமைச்சு தீவேட் தொழில் திறன் கல்வியை வழங்கி வருகிறது.

இதன் மூலம் போட்டியிடும் திறமையான தொழிலாளர்களை நாடு கொண்டிருக்கும் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles