
புத்ரா ஜெயா ஆக 16-
மலேசியாவுக்கான வங்காளதேச தூதர் கோலம் சர்வார் நேற்று மனிதவள அமைச்சர் வ. சிவகுமாரை மரியாதை நிமித்தமாக அவரது அலுவலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
மாண்புமிகு கோலம் சர்வார் தனது தூதர் பதவியை நிறைவு செய்து, தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு சங்கத்தின் (SAARC) பொதுச் செயலாளராக 2023 செப்டம்பரில் தனது பணியை தொடங்கவுள்ளார்.
பரந்த அனுபவம் கொண்ட அவர் சார்க் அமைப்பிற்கு சிறந்த சேவையை வழங்குவார் என்று பெரிதும் நம்புகிறேன்.
அவருக்கு இவ்வேளையில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக மனித வள அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.

