
புத்ராஜெயா, செப்.27-
நாட்டில் தொழிலாளர்களின் நலன்களை பாதுகாப்பதில் அரசாங்கத்தின் முயற்சிகள் தொடரும் என்று மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் தெரிவித்தார்.
தொழிலாளர்களுக்கு எப்போதும் அரசு அதிக முக்கியத்துவத்தை வழங்கிக் கொண்டிருக்கிறது.
அந்த வகையில் 2023 இல், மொத்தம் 731,866 முறைசாரா துறை தொழிலாளர்கள் SOCSO இன் கீழ் பங்களித்துள்ளனர்.
தொழிலாளர்களின் நலனைப் பாதுகாப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளைத் தொடர இது மிகவும் சாதகமான முன்னேற்றமாகும் என்று அவர் சொன்னார்.

