நாடு முழுவதும் உள்ள TVET நிறுவனங்களுக்கான சேர்க்கை அக்.30 முதல் UP_TVET மூலம் செய்யப்படும் !துணை பிரதமர் அறிவிப்பு

புத்ரா ஜெயா அக் 6-
நாடு முழுவதும் உள்ள 1,334 தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சி (TVET) நிறுவனங்களுக்கான அனைத்து சேர்க்கை விண்ணப்பங்களும் அக்டோபர் 30 முதல் ஒரு சேனல் மூலம் மட்டுமே செய்யப்படும் என்று துணை பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

இது TVET ஆட்சேர்ப்பு பிரிவு (UP_TVET) போர்டல் ஆகும்.

தேசிய TVET கவுன்சில் குழுவின் தலைவரான டத்தோஸ்ரீ அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறுகையில் விண்ணப்பங்களின் ஒருங்கிணைப்பை உறுதிசெய்து, அதன் மூலம் நகல்களைத் தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்த விண்ணப்பம், பங்கேற்பாளரின் விருப்பத்தின் அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள 1,334 TVET நிறுவனங்களுக்குள் நுழைவதாகும்.

இது அவர்கள் ஆர்வமுள்ள பாடநெறி மற்றும் TVET நிறுவனத்தின் பெயர்கள் ஆகும்.

மலேசிய கல்வி, தொழில்நுட்பம் மற்றும் தொழிற்பயிற்சி கவுன்சிலின் அமைச்சரவைக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்தார்.

இந்த கவுன்சிலிங் கூட்டத்தில் மனிதவள அமைச்சர் வ சிவகுமார், உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன், கல்வி அமைச்சர் பாட்லினா சிடேக் உட்பட பல அமைச்சர்களும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles