
மலேசியாவில் 25 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் நம்பிக்கை குழுமம் எதிர்வரும் அக்டோபர் 26 & 27 ஆகிய இரண்டு நாள்களில் பிரமாண்டமான ம “நம்பிக்கை நட்சத்திர விருதுகள்” & “நம்பிக்கைவர்த்தக விருதுகள்” விழாவை ஏற்பாடு செய்திருக்கிறது.
மிகப் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்திருக்கும் இந்த “நம்பிக்கை நட்சத்திர விருதுகள்” & “நம்பிக்கைவர்த்தக விருதுகள்” விழா டேவான் துன் ரசாக், பேங்க் ரக்யாட் மண்டபம், ஜாலான் டிராவர்ஸ், மலேசியா எனும்முகவரியில் மேலே குறிப்பிட்ட தேதிகளில் நடைபெற இருக்கிறது.
இதற்கான அறிவிப்பாக இன்று தலைகரில் அமைந்துள்ள பெசிபிக் ரெஜென்சி ஹோட்டலில் செய்தியாளர்சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.

மலேசியாவில் 25 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் நம்பிக்கை குழுமம் எதிர்வரும் அக்டோபர் 26 & 27 ஆகிய இரண்டு நாள்களில் பிரமாண்டமான முறையில் “நம்பிக்கை நட்சத்திர விருதுகள்” & “நம்பிக்கைவர்த்தக விருதுகள்” விழாவை ஏற்பாடு செய்திருக்கிறது.
மிகப் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்திருக்கும் இந்த “நம்பிக்கை நட்சத்திர விருதுகள்” & “நம்பிக்கைவர்த்தக விருதுகள்” விழா டேவான் துன் ரசாக், பேங்க் ரக்யாட் மண்டபம், ஜாலான் டிராவர்ஸ், மலேசியா எனும்முகவரியில் மேலே குறிப்பிட்ட தேதிகளில் நடைபெற இருக்கிறது.
இதற்கான அறிவிப்பாக இன்று தலைகரில் அமைந்துள்ள பெசிபிக் ரெஜென்சி ஹோட்டலில் செய்தியாளர்சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. கடந்த ஆண்டு வெற்றிகரமாக நம்பிக்கை விருது விழாவை செய்துமுடித்ததை தொடர்ந்து இவ்வாண்டும் நம்பிக்கை குழுமத்தின் “நம்பிக்கை நட்சத்திர விருதுகள்” & “நம்பிக்கை வர்த்தக விருதுகள்” விழாவை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருப்பதாக நம்பிக்கைகுழுமத்தின் தோற்றுநரும் தலைவருமான டத்தோ ஶ்ரீ முஹம்மது இக்பால் தெரிவித்தார்.

நமது மலேசிய நாட்டில் வர்த்தகத்தில் நம் இந்தியர்கள் தங்களது வெற்றிகளை பதிவு செய்து வருகின்றனர். உழைப்பின் மூலம் இந்தியர்களின் அடையாளங்களை நிலைபெற செய்த தொழில் முனைவர்களைஊக்குவிக்கும் வகையில் இந்த ஆண்டு முதன் முறையாக “நம்பிக்கை வர்த்தக விருது” யும் ஏற்பாடு செய்து கௌவரவிக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டில் அனைத்து துறைகளிலும் சிறந்து விழங்குகின்ற நமது இந்திய தொழில்முனைவோர்களைஅடையாளம் கண்டு அவர்களுக்கு வழங்கவிருக்கும் வர்த்தக விருது பிரிவுக்கு சிறப்பு தேர்வு குழு மூலம்வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்டுவார்.
“நம்பிக்கை வர்த்தக விருதுகள்” பிரிவில் சிறந்த மருத்துவர், வழக்கறிஞர், முன்னுதாரண தமிழ்ப்பளி, கல்விஆசிரியர், நாளிதழ் ஆசிரியர், சமூக இயக்கம், செய்தியாளர், ஆய்வு எழுத்தாளர், கல்வியாளர், தன்முனைப்புபேச்சாளர், சாதனையாளர், விளையாட்டாளர், மூத்த விளையாட்டாளர், என 26 விருதுகள் வழங்கப்படஉள்ளது.
மேலும் இந்திய சமூதாயத்தின் மேம்பாட்டிற்கும் நனமைக்கும் பாடுபடும் முன்னோடிகள், சாதனையாளர்கள், கலை மற்றும் சமூக ஊடக கலைஞர்காலை கௌவரவிக்கும் வகையில் “நம்பிக்கை நட்சத்திர விருதுகள்” பிரிவில் சுமார் 35 விருதுகள் வழங்கி கௌவரவிக்கபடவுள்ளது.
இந்த “நம்பிக்கை நட்சத்திர விருதுகள்” பிரிவில் இடம் பெற்றிருக்கும் கலைத்துறை மற்றும் சமூக ஊடகவிருதுகளுக்கு மக்கள் நேரடியாக நம்பிக்கை அகப்பக்கத்தில் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும். அதிகவாக்குகள் பெற்ற நபருக்கு இந்த “நம்பிக்கை நட்சத்திர விருதுகள்” பிரிவில் வழங்கப்படும்.
இதனை தொடர்ந்து இந்த ஆண்டு “மலேசிய மாமனிதர் துன் சாமிவேலு வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கப்பட இருக்கின்றது.
மேலும் இந்த ஆண்டு தமிழ்நாட்டிற்கான கலைத்துறை விருதுகளும் அறிமுகம் செய்திருப்பதாகவும் அதில்வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்க இருப்பதாகவும் டத்தோ ஶ்ரீ முஹம்மது இக்பால் கூறினார்.

