
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மற்றும் பினாங்கு மாநில சட்டமன்றங்களைக் கலைக்கப்பதில்லை என முடிவெடுக்கப்பட்டதாக பக்கத்தான் ஹராப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
சட்டப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு ஏதுவாக இம்முடிவு எடுக்கப்பட்டது.
உண்மையில் அதுதான் எங்களின் கொள்கையாகும். அரசாங்கப் பணத்தையும் ஒதுக்கீட்டையும் தேர்தலுக்கு பயன்படுத்த முடியாது.
அதனால்தான் மத்திய, மாநில அரசுகள் பதவி விலகியவுடன் அவர்கள் சட்டதிட்டங்களையும் தேர்தல் ஆணையத்தின் விதிகளையும் மீறியிருக்கிறார்கள் என்று அவர் சொன்னார்..

