
புத்ரா ஜெயா, டிச 11-
தன்னலம் கருதாமல் சமுதாயத்திற்கு சேவையாற்றிக் கொண்டிருக்கும் காப்பின் மலேசியா இயக்கத்திற்கு மனிதவள அமைச்சர் வ. சிவக்குமார் 15,000 வெள்ளி மானியம் வழங்கினார்.
காப்பின் இயக்கத்தின் சார்பாக தேசிய உதவித் தலைவர் Dato’ M.பாஸ்கரன்,தேசிய பொது செயலாளர் Dr.ராஜன், தேசிய நிர்வாக செயலாளர் Dr.விஜயகுமார், ஆலோசகர் Tuan.பசீர், சிலாங்கூர் மாநில தகவல் பிரிவு தலைவர் Dr.சோலமன், இளைஞர் பகுதி பொறுபாளர் திரு.B. லோகவிக்நேஸ்வரன் ஆகியோர் அமைச்சர் சிவக்குமாரிடம் இருந்து இந்த நிதியை பெற்றுக்கொண்டனர்.
அடுத்த ஆண்டிலும் காப்பின் சம்மேளனம் தொடர்ந்து சமூக பணிகளை ஆற்றுவதற்கு பேருதவியாக இந்நிதி அமைந்துள்ளது.
தக்க தருணத்தில் 15,000 வெள்ளி மானியம் வழங்கிய மனிதவள அமைச்சர் சிவக்குமாருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று
டத்தோ டாக்டர் பாஸ்கரன் தெரிவித்தார்.

