
நாட்டின் 15 ஆவது பொதுத் தேர்தலில் சிகாமாட் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட மஇகா முன்னாள் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியத்திற்கு வாய்ப்பு வழங்குங்கள் என்று மூத்த அரசியல்வாதி பாலகுரு கேட்டுக் கொண்டுள்ளார்.
பெந்தோங் நாடாளுமன்ற தொகுதியில் மசீச முன்னாள் தலைவர் டத்தோஸ்ரீ லியோவ் தியோங் லாயை மசீச தலைவர் வீ கா சியோங் பரிந்துரை செய்துள்ளார்.
மசீச கட்சியின் நிலைப்பாட்டை பயன்படுத்தி ம இகா வும் டான்ஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியத்திற்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று அவர் சொன்னார்.
டான்ஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் மீண்டும் சிகாமாட் நாடாளுமன்ற தொகுதிக்கு திரும்ப வேண்டும் என்று உள்ளூர் தலைவர்கள் விரும்புகிறார்கள் என்றார் அவர்.

