
கெராக்கான் கட்சித் தலைவர்கள் அனைவரும் மிகவும் நேர்மையானவர்கள்.
அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல்களில் சிக்கிக் கொள்ளாதவர்கள்.
பல்லின மக்களை கொண்ட கெராக்கான் கட்சி எப்போதும் மக்களுக்கு தொடர்ந்து போராடுகிறது என்று அதன் தேசிய உதவித் தலைவர் டத்தோ பரமேஸ்வரன் தெரிவித்தார்.
கெராக்கான் கட்சி எப்போதும் அனைத்து இன மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வருகிறது.
அந்த வகையில் விரைவில் நடைபெறும் பொது தேர்தலில் அதிகமான இந்திய வேட்பாளர்களை கெராக்கான் கட்சி களத்தில் இறங்குகிறது என்று அவர் சொன்னார்.

