
உலு சிலாங்கூர், ஜன.18-
2024 -2025 ஆம் ஆண்டுக்கான நகராண்மைக் கழக கவுன்சிலர் நியமனம் இன்று நடைபெற்ற நிலையில் 21 கவுன்சிலர்கள் இன்று நியமிக்கப்பட்டனர்.
அதில் உலு சிலாங்கூர் நகராண்மைக் கழக கவுன்சிலர்களின் பி.கே.ஆர் தலைமை கவுன்சிலராக பா.புவனேஸ்வரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று அனைவரும் கவுன்சிலர்களாக சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.

