
சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் கணபதிராவ், மாண்புமிகு salehin மற்றும் ஆட்சிக் குழு உறுப்பினர் மாண்புமிகு ராயுடு ஆகியோரின் அரசியல் செயலாளராக 13 ஆண்டுகள் சேவையாற்றிய அனுபவம் திருமதி யோகேஸ்வரி சாமிநாதன் இருக்கிறது.
ஜசெக கட்சியில் நீண்ட கால உறுப்பினர் மற்றும் சிறந்த மக்கள் சேவையாளராகவும் இவர் வலம் வருகிறார்.
சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள தமிழ்ப் பள்ளிகள், இந்து ஆலயங்கள், இந்திய மாணவர்களுக்கு உயர்கல்வி நிதி, அரசு சார்பற்ற அமைப்புக்களுக்கு நிதி கிடைக்க இவர் முக்கிய பங்காற்றினார்.
இப்போது ஷா ஆலம் நகராண்மைக் கழகத்தின் உறுப்பினராக இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

