
செலாயாங், ஜன 27-
விரைவில் கொண்டாடப்படும் சீன புத்தாண்டை முன்னிட்டு டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ இன்று காலையில் செலாயாங் ஜெயாவில் உள்ள சந்தைக்கு வருகை புரிந்தார்.
டமான்சாரா நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செலாயாங் ஜெயா காலை சந்தையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
இங்குள்ள மக்களை நேரில் சந்தித்து சீனப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Bukit Lanjan சட்டமன்ற உறுப்பினர் Puan Pua Pei Ling இதில் கலந்து சிறப்பித்தார்.
மக்களை சந்தித்து நலம் விசாரித்த இருவரும்
ஆரஞ்சு பழங்களை வழங்கி மகிழ்ச்சியை புலப்படுத்தி கொண்டனர்.

