
பெஸ்தாரி ஜெயா,பிப்-2
கோலாசிலாங்கூர் பெஸ்தாரி ஜெயா தமிழ்ப் பள்ளியில் தலைமை ஆசிரியர் திரு எஸ் எஸ் பாண்டியன் அவர்களின் ஆதரவோடு கவிமாரனின் “இலக்கை நோக்கி” எனும் மாணவர்களுக்கிடையே கருத்தரங்கு கலந்துரையாடல் நேற்று நடைபெற்றது.
100க்கும் மேற்பட்டோர் மாணவர்கள் இதில் கலந்து கொண்டார்கள் .
குறிப்பாக கோலாசிலாங்கூர் வட்டாரத்தில் உள்ள ஆறாம் ஆண்டு தமிழ்ப் பள்ளி மாணவர்கள் சுமார் ஒன்றரை மணி நேரம் பயிற்சியில் கலந்து கொண்டனர்.
நல்லொழுக்கம், எதிர்கால சிந்தனை, சமுதாய கடப்பாடு, கல்வி மேம்பாடு ஆகிய விஷயங்கள் மாணவர்களுக்கு பயிற்சியின் வழி போதிக்கப்பட்டது.
பள்ளி ஆசிரியர்களும் இதற்கு சிறப்பான ஒத்துழைப்பை வழங்கினர்.
திரு சுந்தர் அவர்கள் உதவிகளை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

