
கோலாலம்பூர், பிப்.5-
நாட்டில் நிகழும் மரணச் சம்பவங்களில் புற்று நோய்
நான்காவது இடத்தில் உள்ளதை மலேசிய புள்ளிவிபரத் துறையின் 2023ஆம் ஆண்டு தரவுகள் காட்டுகின்றன.
கடந்த 2021ஆம் ஆண்டில் 10.5 விழுக்காடாக இருந்த புற்றுநோயினால் உயிர் இழப்போரின் எண்ணிக்கை 2022ஆம் ஆண்டு 12.6 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
தனியார் மருத்துவமனைகளில் நிகழும் மரணங்களில் புற்றுநோய் முதன்மையானதாகவும் (26.44 விழுக்காடு) அரசாங்க மருத்துவமனைகளில் நிகழும் மரணங்களில் நான்காவதாகவும் (9.29 விழுக்காடு) உள்ளதை 2023
ஆம் ஆண்டு சுகாதார அமைச்சின் தரவு அறிக்கை காட்டுகிறது என்றுசுகாதார அமைச்சர் டாக்டர் ஜூல்கிப்ளி அகமது கூறினார்.

