
கிரேட் 56 மற்றும் அதற்கும் கீழ்ப்பட்ட ஒப்பந்த
பணியாளர்கள் உள்பட அனைத்து பொதுச்சேவை ஊழியர்களும் 2,000 வெள்ளியையும் பொதுச் சேவைத் துறையின் முதன்மை பதவி வகிப்பவர்களுக்கு 1,000 வெள்ளியையும் உள்ளடக்கிய தொடக்க கட்ட ஊக்கத் தொகை எதிர்வரும் பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி ஒரே கட்டத்தில் வழங்கப்படும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.
போலீஸ், தீயணைப்புத் துறை, ஆயுதப்படை மற்றும் அனைத்து சீருடைப் பணியாளர்களை உள்ளடக்கிய முதன்மை பொதுச்சேவைத் துறையின் அனைத்து பணியாளர்களுக்கும் தலா 1,000 வெள்ளி வழங்கப்படும் என்று நிதியமைச்சருமான அவர் தெரிவித்தார்.

