அமானா இக்தியார் மலேசியா பொறுப்பாளர்களுடன்துணை அமைச்சர் டத்தோ இரமணன் முக்கிய சந்திப்பு!

புத்ரா ஜெயா, பிப் 16-
அமானா இக்தியார் மலேசியா (Amanah Ikhtiar Malaysia) தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ஹுசைன் அல்ஜூனிட், சிலாங்கூர் மற்றும் விலாயா மாநில அமானா இக்தியார் மலேசியா நிர்வாகத்தினர், கிளை மேலாளர்களை எனது அலுவலகத்திற்கு வருகை தந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூட்டுறவு மேம்பாட்டு துறை துணை அமைச்சர் டத்தோ இரமணன் தெரிவித்தார்..

அமானா இக்தியார் மலேசியா வருகையானது சிலாங்கூர் மற்றும் விலாயா சமூக நண்பர்களுக்கு குறிப்பாக சுங்கை பூலோ நாடாளுமன்றத்தில் நன்மை பயக்கும் திட்டங்களை விவாதித்து திட்டமிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார்.

அமானா இக்தியார் மலேசியா சிலாங்கூர் மற்றும் விலாயாவில் கிட்டத்தட்ட 24,000 பேரை சென்றடையும் வகையில் பல திட்டங்கள் செயல்படுத்தப்படலாம்.

ரமலான், ஹரி ராயா மற்றும் 2024 ஆம் ஆண்டு முழுவதும் நிகழ்ச்சிகளுக்கு பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டன.

நமது அன்புக்குரிய மலேசியாவின் நலனுக்காக மக்களின் பொருளாதாரத்தை உயர்த்த உதவுவோம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles