வாகனங்களில் கைவிடப்படும் குழந்தைகளின் மரணங்களைத் தடுக்க பிரச்சார இயக்கம்

ஷா ஆலம், பிப் 29 – 

வாகனங்களில் பல மணிநேரம் கவனக்குறைவாக கைவிடப்படும்  காரணத்தால்  குழந்தைகள் இறக்கும் சம்பவங்கள் அண்மைய காலமாகப் பதிவாகி வருவதைத்  தொடர்ந்து மாநில அரசு அடுத்த மாதம் பாதுகாப்பு இதன் தொடர்பான  பிரச்சாரத்தைத் தொடங்கவுள்ளது.

வாகனங்களில் குழந்தைகளின் பாதுகாப்புப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான பிரச்சாரத்தை நாங்கள் எதிர்வரும் மார்ச் மாதம்  21 ஆம் தேதி தொடங்குவோம்  என்று  சமூக நலத்துறைக்கான மாநில ஆட்சிக்குழு  குழு உறுப்பினர் அன்பால் சாரி இன்று சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் தெரிவித்தார்.

கடந்த ஜனவரி 30ஆம் தேதியன்று   ஷா ஆலம் மருத்துவமனையின் பின்புற வாயில்  அருகே நிறுத்தப்பட்டிருந்த தாயின் காரில்  மயங்கிய நிலையில் காணப்பட்ட ஐந்து வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் குறித்து  மேரு தொகுதி அமானா மேரு  உறுப்பினர் மரியம் அப்துல் ரஷீட் எழுப்பிய துணைக் கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles