முன்மொழியப்பட்ட குடியுரிமை சட்டத் திருத்தங்கள் இந்த மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல்!

பெட்டாலிங் ஜெயா 9-
வெளிநாட்டில் பிறக்கும் குழந்தைகளின் குடியுரிமை தொடர்பாக, மத்திய அரசமைப்புச் சட்டத்தின் 14 (1) (பி) க்கு முன்மொழியப்பட்ட திருத்தங்களை அரசாங்கம் இந்த மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

குழந்தைகள் குடிமகனாக மாறுவதற்கான உரிமையின் அடிப்படையில் கூட்டாட்சி அரசியலமைப்பில் ‘அப்பா’ என்ற சொல் ‘பெற்றோர்’ அல்லது ‘அம்மா’ அல்லது ‘அப்பா’ என்று மாற்றப்படும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

“இந்த விவகாரம் எழுப்பப்பட்டு நீண்ட காலத்திற்குப் பிறகு, மடாணி அரசாங்கம், பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நான்சி சுக்ரியின் கீழ் இந்த மிக முக்கியமான திருத்தங்களைச் செய்ய முடிந்தது,” என்று 2024 சர்வதேச மகளிர் தின கொண்டாட்டத்தின் போது அவர் கூறினார்.

இந்த திருத்தங்கள் டேவான் ராக்யாட்டில் உள்ள எம்.பி.க்களிடமிருந்து ஒருமனதாக ஆதரவைப் பெறும் என்றும் பிரதமர் நம்புகிறார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles