
கிள்ளான் மார்ச் 20-
கிள்ளானில் உள்ள
ரோஸ் சமூகநல இல்லத்திற்கு சிலாங்கூர் மைபிபிபி உதவிக்கரம் நீட்டியுள்ளது.
இந்த சமூக நல இல்லத்திற்கு 40 தலையணைகளையும் 40 போர்வைகளையும் அன்பளிப்பாக வழங்கியுள்ளது. இந்த தலையணைகள் மற்றும் போர்வைகள் இந்த இல்லத்தில் தங்கியிருப்போருக்கு மிகவும் பயனாக இருக்கும் என்று மைபிபிபி சிலாங்கூர் உதவித் தலைவர் துணைத டாக்டர் சுரேந்திரன் தெரிவித்தார்.
மைபிபிபி கட்சியின் தேசிய உதவித் தலைவர் மற்றும் சிலாங்கூர் மாநில தலைவராக இருக்கும் டத்தோ மோகன் கந்தசாமி தலைமையில் சிலாங்கூர் மைபிபிபி மாநில மக்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை ஆற்றி வருகிறது என்று அவர் சொன்னார்.

