
கோலாலம்பூர் ஏப்ரல் 3-
நாட்டில் ஆண்கள் மத்தியில் காணப்படும் ஆண்மை குறைபாடு பிரச்சனைகளை களையும் நோக்கத்தில் ஏழு சுகாதார சிகிச்சை மையங்கள் உருவாக்க பட்டிருப்பதாக குடும்ப மகளிர் சமூக மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் நோராய்னி தெரிவித்தார்
இது நீண்ட கால முயற்சியாகும் தேசிய மக்கள் தொகை மற்றும் மேம்பாட்டு வாரியத்தின் மூலம் அமைச்சு நாட்டின் முதல் தேசிய கருவுறாமைக்கான மையத்தை நிறுவி உள்ளது என்றார்.
17 கோடியே 10 லட்சம் வெள்ளியில் ஷா ஆலமில் அமைக்கப்படவிருக்கும் இந்த மையம் வரும் 2030 ஆம் ஆண்டில் செயல்படும் என்று எதிர்பார்ப்பதாக அவர் சொன்னார்.
- பெர்னாமா

