புத்ராஜெயா, ஏப் 5: நேற்று முதல் ரஹ்மா ரொக்க நன்கொடையின் (STR) கட்டம் 2இல் 8.4 மில்லியன் பெறுநர்களுக்கு RM100 முதல் RM650 வரையிலான ரொக்கத்தை விநியோகிக்கும் நடவடிக்கை தொடங்கியது.
.
ரஹ்மா ரொக்க நன்கொடை தரவுத்தளத்தில் பதிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கும் புதிய பயனாளிகளுக்கும் வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்தப்படும் அல்லது பேங் சிம்பனான் நேஷனல் (BSN) மூலம் பணம் வழங்கப்படும் என நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு 2024 முதல், பதிவை ஆண்டு முழுவதும் திறக்கும் புதிய அணுகுமுறை அரசாங்கம் மேற்கொள்ளும். மேலும் அதிகமான மக்கள் இந்த உதவி மூலம் பயனடையும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.;
bernama