
பினாங்கு, ஏப்ரல் 6-
இவ்வாண்டு இறுதிக்குள் அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்படலாம் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தெரிவித்தார்.
நீண்ட காலமாக அரசு ஊழியர்களின் சம்பளம் மறு ஆய்வு செய்யப்படவில்லை.
அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்படுவது அவசியம் என்று தாம் கருதுவதாக அவர் சொன்னார்.
ஒரு பக்கம் அரசியல்வாதிகள் மத்தியில் ஊழலை துடைத்தொழிப்போம்.
மறுபக்கம் அரசு ஊழியர்கள் சம்பளத்தை உயர்த்த வழி காணுவோம் என்றார் அவர்.

