
ஷா ஆலம், ஏப் 7- பெட்டாலிங் ஜெயா, டாமன்சாராவிலுள்ள பேரங்காடி ஒன்றின் கார் நிறுத்துமிடத்தில் கடந்த மாதம் 19ஆம் தேதி 500,000 வெள்ளிக்கும் மேற்பட்டத் தொகை அடங்கிய பயணப் பெட்டி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பில் ஆடவர் ஒருவரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
ரொக்கப் பணம் அடங்கிய அந்த பெட்டியை அங்கு வைத்தவர் சம்பந்தப்பட்ட அந்த நபரே என்பது அந்தப் பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமரா மூலம் உறுதி செய்யப்பட்டதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹூசேன் ஓமார் கான் கூறினார்.
bernama

