
(காளிதாஸ் சுப்ரமணியம்)
கோலகுபு பாரு ஏப்ரல் 8-
சில தரப்பினர் சூழ்ச்சி செய்து அரசியலாக்கப்படும் மத பிரச்சினையை நிறுத்த வேண்டிய காலம் வந்து விட்டது என உலுசிலாங்கூர் நாடாளுமன்ற பக்காத்தான் ஹராப்பான் (PH) ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்திய பிரகாஷ் கூறினார்.
சில தரப்பினர் சூழ்ச்சி செய்து அரசியலாக்கப்படும் பிரச்சினையை சுட்டிக்காட்ட வேண்டும்.
கோலா குபு பாரு இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் வேலையில் வாக்காளர்களின் ஆதரவை ஈர்க்கும் வகையில் இனப் பிரச்சினைகள் சூடுபிடிக்கும் வாய்ப்பை நான் நிராகரிக்கவில்லை.
ஒற்றுமை அரசாங்கத்தின் தலைவர்கள் பணியாற்றுவதற்கு நேரத்தையும்
சந்தர்ப்பத்தையும் வழங்க வேண்டும்.
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் பிரதமராகி ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. இந்த நேரத்தில் அவர் ஒரு கடினமான காலகட்டத்தை கடந்து வருகிறார்.
சில கட்சிகளால் எதிர்மறையான நடவடிக்கைகள் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வருகிறது. முந்தைய பிரதமர்கள் இதுபோன்ற கடினமான சவால்களை எதிர்கொண்டதில்லை.
பிரதமருக்கு நாட்டை தொடர்ந்து ஆட்சி செய்ய கால அவகாசம் கொடுக்க வேண்டும்.
இந்த இடைத்தேர்தலில் இந்தியர்களைப் பாதிக்கும் பிரச்சினைகளை வைத்து விளையாடுபவர்களில் பலர் உள்ளனர்,
அதே நேரத்தில் அரசாங்கம் அனைவருக்குமான வாய்ப்புகளை வழங்கி கொண்டுதான் வருகிறது.
இப்போது கோலகுபு பாருவில் PH க்கான ஆதரவு மிகவும் நன்றாக உள்ளது. இப்போது ஒரே பிரச்சினை மத அரசியலை நிறுத்த வேண்டும்.
அவர்கள் (சம்பந்தப்பட்ட கட்சிகள்) இந்தப் பிரச்சினையை அரசியல் மூலதனமாகப் பயன்படுத்தி, PH இலிருந்து சீன மற்றும் இந்திய ஆதரவைக் கொண்டுவரும் நம்பிக்கையில், இந்த விஷயத்தை அரசாங்கம் “கவனிக்கவில்லை” என்ற சாக்குப்போக்குடன் பிரச்சாரம் செய்வார்கள்.
இப்போது இந்த பிரச்சினை மிகவும் சர்ச்சைக்குரியது, அவர்கள் இந்தியர்களை கவனிக்கவில்லை, மற்ற இனத்தை மட்டுமே கவனித்துக்கொள்கிறார்கள் என்று பிரச்சாரம் செய்வார்கள்.
ஒட்டுமொத்தமாக, மறைந்த லீ கீ ஹியோங் (கோல குபு பாரு மாநில சட்டமன்றத் தொகுதியின் பொறுப்பாளர்) தனது பொறுப்புகளை மிகச் சிறப்பாகச் செய்துள்ளார் என்று அவர் தமது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

