
காளிதாஸ் சுப்ரமணியம்
மா. பவளச்செல்வன்
கோலகுபு பாரு ஏப்ரல் 20 இந்திய சமுதாயத்திற்கு ஒதுக்கப்பட்ட 100 மில்லியன் மித்ரா நிதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மானியம் வழங்கப்படுமா என்பது குறித்து பரிசினை செய்யப்படும் என மித்ரா தலைவர் பிரபாகரன் தெரிவித்தார்.
கடந்தாண்டு 72 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா ஒரு லட்சம் வெள்ளி வீதம் மித்ரா நிதி வழங்கப்பட்டது .
தங்களது தொகுதியில் உள்ள வறுமை கோட்டில் வாழும் மக்களுக்கு உதவும் வகையில் இந்த நிதி பயன்படுத்தப்பட்டது
இவ்வாண்டும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மித்ரா மானியம் ஒதுக்கப்படுமா என்ற கேள்விக்கு அது குறித்து மறுபரிசலினை செய்யப்படும் என்று அவர் சொன்னார்.
கடந்த ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினருக்கு மித்ரா நிதி ஒதுக்கப்பட்ட விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

