
புத்ராஜெயா, ஏப் 25: வாடிக்கையாளர் தேசிய மொழியில் தேர்ச்சி பெறத் தவறும்
காரணத்தால் எந்தவொரு பாஸ்போர்ட் விண்ணப்பத்தையும் குடிவரவு அதிகாரிகள்
நிராகரிக்க முடியாது என குடிவரவுத் துறை இயக்குநர் ஜெனரல் டத்தோ ரஸ்லின்
ஜுசோவ் இன்று தெரிவித்தார்.
குடிவரவு அதிகாரிகள் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதில் குறிப்பாக விண்ணப்பத்தை உறுதிப்படுத்த பல்வேறு அம்சங்களில் சோதனைகளை மேற்கொள்வார்கள் .
ஆனால், மதிப்பாய்வு தொழில் ரீதியாகவும் விவேகமாகவும் செய்யப்பட வேண்டும்.
மக்களுக்கு நல்ல சேவையை வழங்குவதற்கு குடிவரவுத் துறை உறுதிபூண்டுள்ளது மற்றும் அத்துறையால் நிர்ணயிக்கப்பட்ட நிலையான செயல்பாட்டுநடைமுறைகளின் கீழ் வாடிக்கையாளர்களை நடத்துமாறு அனைத்து அதிகாரிகளுக்கும் எப்போதும் நினைவூட்டப்படுகிறது என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
முன்னதாக, யுடிசி பினாங்கில் மலாய் மொழி பேச தெரியாமல் ஒருவர் தனது தாயின்
பாஸ்போர்ட்டை புதுப்பிக்க முடியாமல் போனது குறித்த செய்தி முகநூல் பக்கத்தில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.
- பெர்னாமா

