கண்மூடித்தனமான குற்றச்சாட்டுகள் வழி இடைத்தேர்தலில் தவறான தோற்றதை ஏற்படுத்த முயற்சி- அமிருடின் சாடல்!

சிப்பாங், ஏப் 26- டெங்கில் நில அங்கீகாரம் தொடர்பில் எதிர்க்கட்சி
இயக்கவாதி ஒருவர் சுமத்தி வரும் கண்மூடித்தனமான குற்றச்சாட்டுகள்
கோல குபு பாரு இடைத் தேர்தல் சமயத்தில் மக்கள் மத்தியில்
எதிர்மறையான தோற்றத்தை ஏற்படுத்தும் நோக்கிலானது என
நம்பப்படுகிறது.

பட்ருள்ஹிஷாம் ஷாரின் அல்லது சேகுபார்ட் எனும் அந்த நபர்
தமக்கெதிராக சுமத்தி வரும் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை
என்பதோடு எந்த ஆதாரத்தையும் கொண்டிருக்கவில்லை என்று மந்திரி
புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

ஒரு வேளை அவருக்கு பல அடுக்கு இலக்குகள் இருக்கலாம். பிரச்சனை
என்னவென்றால் ஏற்கனவே பதிலளிக்கப்பட்ட விஷயத்தை மீண்டும்
கிளறுவது, பரபரப்பூட்டும் வகையில் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகும்.
ஆனால், இவை யாவும் உண்மையில் வெறும் குப்பைகளாகும் என அவர்
தெரிவித்தார்.

Selangor kini

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles