
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலகுபு பாரு மே 8-
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
வரும் மே 11 ஆம் தேதி வாக்களிப்பு தினமாகும். இன்னும் மூன்று தினங்களே இருப்பதால் பக்கத்தான் ஹராப்பான் மற்றும் பெரிக்கத்தான நேஷனல் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி உள்ளனர்.

நேற்று கோலகுபு பாரு அம்பாங் பிச்சா என்ற இடத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் பாக் சோக் தாவை ஆதரித்து சட்டத்துறை துணை அமைச்சர் குலசேகரன் பிரச்சாரம் செய்தார்.
இந்த கூட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு ஆதரவு வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

