
கோலாலம்பூர், மே 8 : இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிப்பதிலும், முதலீட்டு வாய்ப்புகளை விரிவு படுத்துவதிலும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்த மலேசியாவும் சவுதி அரேபியாவும் ஒப்புக் கொண்டுள்ளன என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.
நேற்று வர்த்தக அமைச்சரும், சவுதி அரேபியாவின் தேசியப் போட்டி மையத்தின் தலைவருமான டாக்டர் மஜித் அல்-கஸ்ஸாபி மற்றும் புத்ரா ஜெயாவில் உள்ள தூதுக்குழுவின் மரியாதை நிமித்தமான சந்திப்பை தொடர்ந்து, இரு நாடுகளும் சேவைகள் தொழில்நுட்பம் மற்றும் புதுமை போன்ற புதிய துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கு ஒப்புக்கொண்டதாக அன்வார் கூறினார்.
“சவுதி அரேபியா, மேற்கு ஆசியாவில் மலேசியாவின் மிக முக்கியமான வர்த்தக பங்காளியாகும் ” என்று அவர் இன்று முகநூல் மூலம் தெரிவித்தார்

