
கோலாலம்பூர், மே 17
சிலாங்கூரில் உள்ள ஒரு முன்னணி ஈய சுரங்க நிறுவனத்தின் பங்குதாரர்கள், RM2.8 மில்லியன் பணத்தை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் மீது விசாரணை நடவடிக்கை எடுக்குமாறு போலிஸ் புகார் செய்யப்பட்டுள்ளது.
இந்நிறுவத்தின் பங்கதாரரான முகமட் ஜெய்ன் கசாலி (வயது 69), நிர்வாகத் தலைவர் தவறான நடவடிக்கைகளுக்கா ஏற்கனவே இருக்கும் சுரங்க நிறுவனத்திற்கு கிட்டத்தட்ட ஒத்த பெயரைப் பயன்படுத்தி மற்றொரு நிறுவனத்தை நிறுவியிருப்பாதக குற்றம் சாட்டினார்.
“இந்த விவகாரம் தொடர்பாக நான் மூன்று போலிஸ் புகார் செய்துள்ளேன், கடந்த 2/4/2022 அன்று முதல் போலிஸ் புகார் செய்திருக்கிறேன். இரண்டாவது புகாரை அதே ஆண்டு டிசம்பர் 26இல் செய்தேன். இந்த ஆண்டு மே 16இல் எனது மூன்றாவது புகார் காவல் நிலையத்தில் பதிவு செய்தேன்.
“நிர்வாகத் தலைவரால் RM2,828,208.80 தொகையை உள்ளடக்கிய சட்டவிரோத நிதி பரிவர்த்தனைகளைக் கண்டறிந்த சமரச அறிக்கையின் மூலம் எங்கள் நிறுவனத்தின் தணிக்கையாளரின் அடிப்படையில் எனது அறிக்கை செய்யப்பட்டது”.
“வலுவான ஆதாரங்கள் இருந்தபோதிலும், அதிகாரிகளிடமிருந்து இதுவரையிலும் அந்த தனிநபருக்கு எதிராக எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்று அவர் இன்று வாங்சா மஜூவில் நடைபெற்ற ஊடகசந்திப்புக் கூட்டத்தில் கூறினார்.
அவரது கூற்றுப்படி, கடந்த வியாழன் சமீபத்திய போலீஸ் புகாரில், முகமட் ஜெயின் மலேசிய நிறுவனங்களின் ஆணையத்திற்கு (SSM) நிர்வாகத் தலைவரால் நிறுவப்பட்ட புதிய நிறுவனம் தாக்கல் செய்த தணிக்கை அறிக்கையையும் கேள்விக்குள்ளாக்கினார், மேலும் நிறுவனத்தின் வருவாய் ஈய சுரங்கத்தின் மூலம் கிடைத்தது.
“இருப்பினும், இங்குள்ள பிரச்சினை என்னவென்றால், மலேசிய ஈய வாரியத்துடனான எங்கள் தேடுதலில் புதிய நிறுவனத்திடம் தகரம் சுரங்க நிலம் இல்லை என்பது கண்டறியப்பட்டது.
“மேலும், புதிய நிறுவனத்திடம் ஈயம் தோண்டுவதற்கான சரியான உரிமம் இல்லை என்பதையும், அதன் மூலம் நிறுவனத்தின் அனைத்து சுரங்க நடவடிக்கைகளும் சட்டவிரோதமானது மற்றும் ஈய கட்டுப்பாடு சட்டம் 1954 (சட்டம் 362) சட்டத்திற்கு எதிரானது என்பதையும் நாங்கள் கண்டறிந்தோம்.
இவ்வாறு மூன்றாவது போலிஸ் புகாரில், செயற்குழு தலைவர் மற்றும் நிறுவப்பட்ட புதிய நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளின் மூலம் விரிவான விசாரணையை பொலிஸாரால் மேற்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையுடன் தான் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.

