பினாங்கு இந்தியர் பெண்கள் கால்பந்து அகாடமிக்கு மேலும் 8 புதிய விளையாட்டாளர்கள்!

செ.வே.முத்தமிழ்மன்னன்

பிறை மே 21
Penang Indian FC அகாடமி கடந்த வாரம் இறுதியில் பினாங்கு சி
பிறையில் நடைபெற்ற Bazar Wejana Vanita Perai நிகழ்வில் பங்கேற்றது! பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ ராஜூ இந்த நிகழ்வை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

இதுபோன்ற ஒரு பொது நிகழ்வில் பினாங்கு மாநில இந்தியர் கால்பந்து அகாடமி கலந்து கொண்டது இதுவே முதல் முறையாகும் என்று பினாங்கு மாநில இந்தியர் கால்பந்து சங்கத்தின் தலைவர் ஸ்ரீ சங்கர் தெரிவித்தார்.

பெண்கள் கால்பந்து மற்றும் எங்கள் அகாடமியை ஊக்குவிப்பதற்காக எங்கள் அகாடமி இந்த விழாவில் மிகவும் மும்முரமாக இருந்தது,

இதன் மூலம் 8 புதிய இளம் விளையாட்டாளர்களை வெற்றிகரமாக பதிவு செய்துள்ளோம்
என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்றார் அவர்.பினாங்கு இந்தியன் எஃப்சி இந்த மாதிரியான விளம்பரத்தில் ஈடுபடுவது இதுவே முதல் முறை.

சமூகத்தில் பெண்கள் கால்பந்தை ஆதரிப்பதற்கும் வளர்ப்பதற்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இந்த அருமையான தருணத்தில்
ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles