
கோலாலம்பூர், மே 21- மலேசியாவில் அரசாங்கத்தை விமர்சிக்க
அனுமதிக்கப்படுவதாகக் கூறிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்,
ஆயினும் இனம், சமயம் மற்றும் ஆட்சியாளர்கள் (3ஆர்) சம்பந்தப்பட்ட
உணர்ச்சிகரமான விவகாரங்களில் ஊடகங்களுக்கு கட்டுப்பாடு உள்ளது
என்பதை ஒப்புக் கொண்டார்.
ஊடக சுதந்திரத்தை அமல் படுத்தும் விஷயத்தில் வன்முறையை
உருவாக்கக்கூடிய மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்கு ஆபத்தை
விளைவிக்கக் கூடிய நடவடிக்கைகளை தாம் ஒருபோதும் அனுமதிக்க
முடியாது என்று அவர் சொன்னார்.
bernama

