
துரோனோ, ஜூன் 1-
பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ. சிவகுமார் தனது தொகுதி மக்களுக்கு தொடர்ந்து சிறப்பான முறையில் உதவிகளை வழங்கி வருகிறார்.
அந்த வகையில் துரோனோ கம்போங் செர்காய் ஜாடி கிராமத்தில் வசிக்கும் மலாய் மாது காசிமாவுக்கு அவர் சக்கர நாற்காலியை வழங்கி உதவி புரிந்தார்.
நோயினால் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவமனைக்கு சென்று வர இந்த சக்கர நாற்காலி துணை புரியும் என்று அவர் சொன்னார்.

