நாட்டின் கௌரவத்தை உயர்த்த உதவுவீர்- இளைஞர்களுக்கு பிரதமர் வேண்டுகோள்!

புத்ராஜெயா, ஜூலை 3- தொடர்ந்து முன்னோக்கிச் செல்வதற்குரிய
வாய்ப்புகளை மலேசியா கொண்டுள்ள வேளையில் நாட்டின் கௌரவத்தை
உயர்த்தும் முயற்சிகளுக்கு இளைஞர்கள் உதவ வேண்டும் என்று பிரதமர்
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார்.

மலேசியா மீது தாம் உயர்ந்த லட்சியங்களையும் நம்பிக்கையையும்
கொண்டுள்ளதாகக் கூறிய அவர், நாட்டிற்காக தொடர்ந்து பாடுபட தாம்
விரும்புவதாகவும் சொன்னார்.

பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மற்றும் அடுத்த தலைமுறையினரின்
எதிர்காலம் உத்தரவாதம் உள்ளதாக இருப்பதை உறுதி செய்யவும் நாட்டின்
கௌரவத்தை உயர்த்தவும் நான் தொடர்ந்து சேவையாற்ற விரும்புகிறேன்.

நாட்டை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டுச் செல்வதற்காக ஏதாவது
செய்யும்படி ‘முதியவர்‘ என்ற முறையில் உங்களை நான் கேட்டுக்கொள்ள
மட்டுமே முடியும். அதைத் தவிர வேறென்றுமில்லை என்று அவர்
தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles