

கோலாலம்பூர் ஜூலை 7-
இணைய பகடிவதைக்கு இலக்கான இந்திய பெண் ஈஷா எனப்படும் ராஜேஸ்வரி சில தினங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டார்.
இவரின் தற்கொலை நாட்டில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.
இன்று இவரின் இல்லத்துக்கு விரைந்த தகவல் தொடர்புத்துறை அமைச்சர் பாமி பட்சில் ஈஷாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

