சிலாங்கூர் சுகாதாரப் பரிசோதனை திட்டத்தில் 20 பங்கேற்பாளர்களுக்கு இலவச மூக்கு கண்ணாடி வழங்கப்படும்!

ஷா ஆலம், ஜூலை 18: பத்து தீகா தொகுதியில் நடைபெறவுள்ள சிலாங்கூர் இலவச மருத்துவப் பரிசோதனை திட்டத்தில் பங்குகொள்ள முதலில் வருகை புரியும் பார்வை குறைபாடுடைய 20 பங்கேற்பாளர்களுக்கு இலவச மூக்கு கண்ணாடி வழங்கப்படும்.

எதிர்வரும் சனிக்கிழமை கம்போங் குவாந்தன் கிராமத்தின் பல்நோக்கு மண்டபத்தில் சிலாங்கூர் இலவசச் சுகாதார பரிசோதனை திட்டம் நடைபெறும் என சட்டமன்ற உறுப்பினர் டேனியல் அல்-ரஷிட் ஹரோன் கூறினார். இந்தத் திட்டம் மூக்கு கண்ணாடியை வாங்குவதற்கு மானியங்களையும் வழங்குகிறது.

“மேலும், இந்நிகழ்வில் நாங்கள் கண் பரிசோதனை கவுண்டரையும் திறப்போம். இது குடியிருப்பாளர்கள் தங்கள் கண்களைச் சரிபார்ப்பதை எளிதாக்குகிறது.
“எனவே முதல் 20 கண் பரிசோதனை பங்கேற்பாளர்களுக்கு இலவச மூக்கு கண்ணாடி வழங்கப்படும்.
காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் இந்நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப் படுவதாக டேனியல் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles