
கெடா மாநிலத்தில் உள்ள பாடாங் செராய் நாடாளுமன்ற தொகுதியில் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கருப்பையா முத்துசாமி போட்டியிடுகிறார்.
இவரை எதிர்த்து தேசிய முன்னணி சார்பில் ம இகா வேட்பாளர் டத்தோ சிவராஜ் போட்டியிடுகிறார்.
80,000 மலாய்க்காரர்கள்,20,000 இந்தியர்கள், 15,000 சீனர்கள் இந்த தொகுதியில் வாக்களிக்கும் தகுதியை பெற்றிருக்கிறார்கள்.
தொகுதி மக்களுக்கு நிறைய சேவைகளை கருப்பையா செய்திருக்கிறார்.
இருப்பினும் டத்தோ சிவராஜ் கடந்த சில ஆண்டுகளாக இந்த தொகுதியில் முகாமிட்டு வேலை செய்து வருகிறார்.
நாடே எதிர்பார்க்கும் ஒரு தேர்தல் களமாக பாடாங் செராய் நாடாளுமன்ற தொகுதி மாறியுள்ளது.


